Saturday, May 4, 2019

இமாமத் இருக்குமாயின்...!

இலங்கையில் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் வழிகெட்ட வஹாபிகள் சிலர். அதனை ஒட்டுமொத்த முஸ்லிம்களும் கண்டித்தனர்.

எனினும் சிலர் (பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்கள் அல்ல) இந்த பயங்கரவாத செயலுக்கு முழு முஸ்லிம் சமூகமும் அவர்கள் பின்பற்றும் இஸ்லாமுமே காரணம் என்பது போல கதையளக்கின்றனர்; மத்ரஸாக்கள் மூடப்படவேண்டும், பள்ளிவாசல்கள் மூடப்படவேண்டும், முஸ்லிம் தனியார் சட்டம் ஒழிக்கப்படவேண்டும், தனித்துவ ஆடைகளை அணியக்கூடாது என்றெல்லாம் பிரசாரங்கள் மேற்கொள்கின்றனர்; அதற்கு ஊடகங்கள் சிலவும் துணைபோகின்றன.

விட்டுக்கொடுத்து, சமரசமாக செல்லவேண்டும் என்று போதிப்பதிலேயே எமது உலமா சபை அங்கத்தவர்களும் அரசியல்வாதிகளும் கடும் பிரயாசை எடுப்பதை காணக்கூடியதாக உள்ளது.

இந்த படுபாதக செயலுக்கு முஸ்லிம் சமூகம் பொறுப்பல்ல, அதனால் நியாயமற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது, எமது உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது என்று தைரியமாக கூறக்கூடிய உறுதியான தலைமைத்துவம் இல்லையே என்று கவலைப்படுகிறேன்.

இமாமத் இல்லையென்றால் எல்லோரையும் நாமே அனுசரித்துச் செல்லவேண்டும்.

இமாமத் இருக்குமாயின் எல்லோரும் எம்மை அனுசரித்துச் செல்லவேண்டும்.

No comments:

Post a Comment